Followers

ஒற்றுப் பிழைகள் - 1

on Monday, May 9, 2011


வல்லெழுத்து மிகுமிடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - , கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-
  1. வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-

§  தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.
§  தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.
§  தமிழை + தந்தேன்     = தமிழைத் தந்தேன்.
§  தமிழை + பார்த்தேன்  = தமிழைப் பார்த்தேன்.

  1. அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::-
           கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -

1.      இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ):-

(
-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,
2.      நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-

(
-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்
3.      ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-

(
-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு
4.      ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் (உருபு = அது, உடைய):-

(
-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)
5.      இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-

(
-ம்)

இரண்டாம் வேற்றுமை ... தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)

மூன்றாம் வேற்றுமை ... தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)

ஐந்தாம் வேற்றுமை ... தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)

ஏழாம் வேற்றுமை ... தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

  1. பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-
           பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
(-ம்)
§  அந்த + கரண்டி   = அந்தக் கரண்டி.
§  இந்த + சிற்பம் = இந்தச் சிற்பம்.
§  எந்த + பட்டம்     = எந்தப் பட்டம்.
§  அப்படி + போனான்  = அப்படிப் போனான்.
§  இப்படி + பார்த்தான்   = இப்படிப் பார்த்தேன்.
§  எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.
§  அங்கு + சென்றான்     = அங்குச் சென்றான்.
§  இங்கு + தங்கினான்  = இங்குத் தங்கினான்.
§  எங்கு + கண்டாய்  = எங்குக் கண்டாய்.
§  இனி + கேள்  = இனிக் கேள்.
§  தனி + தமிழ்  = தனித் தமிழ்.
§  என + சொன்னாள்  = எனச் சொன்னாள்.
§  மற்று + பாடலாம்  = மற்றுப் பாடலாம்.
§  மற்ற + குதிரைகள்  = மற்றக் குதிரைகள்.
§  மற்றை + கனவு  = மற்றைக் கனவு.
§  முன்னர் + கண்ட  = முன்னர்க் கண்ட.
§  பின்னர் + கேட்ட  = பின்னர்க் கேட்ட.
§  எல்லா + பெண்கள்  = எல்லாப் பெண்கள்.
§  அவ்வகை + சிற்பம்  = அவ்வகைச் சிற்பம்.
§  இவ்வகை + பண்பு  = இவ்வகைப் பண்பு.
§  எவ்வகை + தோற்றம்  = எவ்வகைத் தோற்றம்.

                        வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:-
          பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-
(-ம்)
§  பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
, , , ய், ர், ழ்
(
-ம்)
+ பக்கம் = அப்பக்கம்,
+ குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்
§  ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ,
(
-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
+ பண்டம் = ஈப்பண்டம்
§  உவமைத் தொகை:-

(
-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)
§  பண்புத் தொகை:-

(
-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)
§  "த்து" என்று முடியும் சொற்களையடுத்து:-

(
-ம்)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்
§  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-

(
-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)
§  இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-

(
-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

                        வினையெச்சங்களில் ஒற்று:-
          பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
(
-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்
(-ம்)
§  நன்றாக + பாடினாள்  = நன்றாகப் பாடினாள்.
§  ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.
§  போய் + செய்     = போய்ச் செய்.
§  அன்றி + சொல்லான் = அன்றிச் சொல்லான்.
§  இன்றி + போவான்  = இன்றிப் போவான்.
§  போல + செய்= போலச் செய்.

0 comments:

Post a Comment