Followers

அளபெடைகள் - விளக்கம்

on Monday, May 9, 2011


அளபெடை

          "", "", "" போன்ற உயிரெழுத்துக்கள் சொல்லின் நடுவிலும் கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வருமெனில் அவையே அளபெடையென்று வழங்கப்படுகிறது. அளபெடை இருவகைப் படும். அவை உயிரளபெடை, ஒற்றளபெடை என்பவை.
மாணவர்களுக்கு தேர்வுக்கு எளியவழி: அளபெடை உள்ள சொல்லை நோக்குக.
(1) "
" இல் முடிந்தால் அது சொல்லிசையளபெடை
(2)
இல்லையேல் அசை பிரித்துப் பார்க்கையில், ஆயின் செய்யுளிசை; மூவசையாயின் இன்னிசை. மிகக் குறைந்த சொற்களை விடுத்து பெரும்பாலும் இவ்வழி சரியாகவே இருக்கும்:-
  1. உயிரளபெடை:
          செய்யுளில் ஓசை குறையும்போது உயிரெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் தம்மளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளில் அளபெடுப்பதால் இஃது செய்யுளிசை அளபெடை எனவும் அழைக்கப்படும். உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழுமே அளபெடுக்கும். எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அதன் இனமான குற்றெழுத்து அதன்பக்கத்தில் வரிவடிவில் அடையாளமாக எழுத்தப்படும். காட்டு:- ஓஒதல், உழாஅர். இனவெழுத்துக்கள்:- http://www.pudhucherry.com/pics/alab.jpgஎன்பதாகும். உயிரளபெடை மூன்று பிரிவுகளையுடையது. அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசையளபெடை, சொல்லிசையளபெடை என்பவையாம்: -

                                                      1.            செய்யுளிசை அளபெடை:
          
செய்யுளில் ஓசை நிறைவு செய்வதற்காக செல்லின் முதல், இடை, கடை மூவிடத்தும் அளபெடுத்து வரும்.
எளியவழி:
(1) "
" எனும் உயிரெழுத்து தவிர எனைய உயிரெழுத்து அச்சொல்லில் இருக்கும்.
(2)
சொல்லைப் பார்க்கின் அது ஈரசைச் சீராக இருக்கும்.
(
-ம்) "ஓஒதல் வேண்டும்", "உழாஅர் உழவர்", "படாஅ பறை"
                                                      2.            இன்னிசை அளபெடை:
          
செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது இன்னிசையளபெடையாம்.
எளியவழி
(1)
அளபெடுக்குஞ் சொல்லில் "" எனும் உயிரெழுத்து இருக்கும்.
(2)
அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.
(
-ம்)"கெடுப்பதூஉம் கெட்டார்க்கு" என்ற தொடரில் "து" எனும் குறில் "தூ" என நெடிலாகி அளபெடுத்துள்ளது.
                                                      3.            சொல்லிசை அளபெடை:
          
செய்யுளில் ஓசை குன்றாதபோது, ஒருசொல் மற்றொரு சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை எனப்படும்.
எளியவழி:
(1)
"
" எனும் உயிரெழுத்தில் முடிந்தாலது சொல்லிசை அளபெடையே.
(2) உயிரெழுத்தை நீக்கிச் சொல்லைப் பார்த்தால், அது ஓரசைச் சீராக இருக்கும்.
(
-ம்) "உரன் நசைஇ உள்ளம் துணையாக" என்னும் தொடரில் "நசை" எனும் சொல்லில் "சைஇ" என்று வினையெச்சமாக வந்து அளபெடுத்துள்ளது.

  1. ஒற்றள பெடை:-
          செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள் அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடை என்றழைக்கப்படும்:-

§  (-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில் வந்தது)
"
கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"
விடங்ங் கலந்தானை" - (இறுதியில் வந்தது)

14 comments:

Priya said...

தரூஉம் என்ன அளபெடை

Priya said...

தரூஉம் என்ன அளபெடை

vijay k said...

செய்யுளிசை அளபெடை

Unknown said...

தமிஇ என்ன அளபெனட ?

Unknown said...

Seyulisai alapadai

Unknown said...

Inisai alapadai

Unknown said...

Uyiralapedai maathirai ???

Unknown said...

Reply fast

Unknown said...

Suppose to be happy to help you have any questions or need any further information please contact me at the end of the day of the day of the day of the day of the day of the day of the day of the day of the day of the day of school ah I will be happy always with me too then please send me a photo of the day of the day of the word skanda Mata ki Jay Bharat Mata di na message was automatically generated yyy you are you thinking for

Unknown said...

உயிரளபெடை

Unknown said...

Pathu (10)

Unknown said...

I need alapadai words

Unknown said...

Uranasai

Unknown said...

Inisai alabedai

Post a Comment