Followers

வினைமுற்று, எச்ச வகைகள்

on Monday, May 9, 2011


வினைமுற்றென்பது யாது?

          ஒரு வாக்கியத்தில் குறிப்பிடும் செயல்/ பயநிலை முடிவு பெற்றிருந்தால் அது வினை முற்று என்று வழங்கப்படும்.:-
எடுத்துக் காட்டு:
படித்த மாணவன் - படித்த என்பது மாணவனெனும் பெயரினை சுட்டுவதால் பெயரெச்சம் எனப்படும்.
படித்துச் சென்றான் - படித்து என்பது சென்றானெனும் வினையைச் சுட்டுவதால் வினையெச்சம் எனப்படும்.
மாணவன் படித்தான் - இதில் மாணவன் செய்த செயலை முற்றுபெற சொல்வதால் வினைமுற்று எனப்படும்.
  1. குறிப்பு வினைமுற்று:
          அவன் நல்லவன் - என்பதில் நல்லவன் நல்லவன் என்பது போல காலங்காட்டா வினைமுற்றுகள் உண்டு. அவை குறிப்பு வினைமுற்று எனப்படும். பெயர் அடியாகப் பிறந்து காலம் காட்டாத குறிப்பு வினைமுற்றுகள் கீழ்வருமாறு:- -
எடுத்துக்காட்டு:-

             §   நீர்த்து, உடைத்து, நன்று, இல்லை, வேறு, இனிது, உண்டு, இன்று, மருகனை, உளன்.

  1. மூன்றிடத்தும் பொருந்தும் வினைமுற்றுகள்:-
1.      தன்மை வினைமுற்று:
          உரைத்தனென், இருந்தனென், போற்றுகேன், செய்கேன், நோற்றிலேன், யாத்திலேன், பார்த்தனென் - இவையனைத்தும் தன்மையிடத்தைக் கூறும் தன்மை வினைமுற்றுகளாம்.
2.      தன்மைப் பன்மை வினைமுற்று:
          தேர்ந்திலம், அறிவாம், தெரிதும், ஆற்றுதும் - இவையனைத்தும் தன்மையிடத்தில் வரும் பன்மை வினைமுற்றுகள்.
3.      முன்னிலை ஒருமை வினைமுற்று:
          கொன்றனை, பார்த்தனை, செய்தாய், குடித்தாய், வருதி, இசைத்தி, கேட்டி, கோடி, காண்டி, உரைத்தி, கிடத்தி - இவையனைத்தும் முன்னிலை ஒருமை வினைமுற்றுகளாம்.
4.      முன்னிலைப் பன்மை வினைமுற்று:
          சென்றீர், செல்வீர் - என்பனயாவும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுகளாம்.
5.      படர்க்கை வினைமுற்று:
          படர்க்கையிடத்தில் உள்ள அய்ந்து பால்களிலும் வருபவை படர்க்கை வினைமுற்றுகளாம்.

                  §   எடுத்துக்காட்டு:
"வந்தான் - ஆண்பால்"
"
வந்தாள், படித்தாள் - பெண்பால்",
"
எய்தின்று, வந்தது, முதற்று, தைத்தன்று - ஒன்றன்பால்",
"
முதல், நீர, போன்ற, வந்தன - பலவின்பால்",
"
சோகாப்பர், எய்துப, ஆப, உணர்ப, வந்தனர் - பலர்பால்", "

                        எதிர்மறை வினைமுற்று:-
          எதிர்மறைப் பொருளை உணர்த்தும் வினைமுற்றுகளான - நேரா, கடவார், துஞ்சேல், நீங்கா, தெரிந்திலன், அறிகிலேன் - போன்றவை எதிர்மறை வினைமுற்றுகள எனப்படும்.
                        ஏவல் வினைமுற்று:-
          முன்னிலையில் ஆணையிடுவதாக வரும் சொற்கள் ஏவல் வினைமுற்றுகள் எனப்படும்.

o    எடுத்துக்காட்டு:
நட, வா, போ - வெறும் பகுதி மாத்திரம்
தேற்றாய், வருதி - ஆய், விகுதியுடைச் சொற்கள்
உண்ணல், உண்ணேல், மறால், உண்ணாதி, உண்ணாதே -
அல், ஆல், ஏல், , விகுதியுடைச் சொற்கள்
பெறுமின், கூறுமின், உண்ணீர், உண்ணும் -
மின், ஈர், உம் - விகுதியுடைச் சொற்கள்

                        வியங்கோள் வினைமுற்று:-
          ஆணையிடுவது போலல்லாமல் வேண்டுகோளைப் போன்று தொனிக்கும் வினைமுற்றுகள் இவை.

o    எடுத்துக்காட்டு:
வாழ்க, நிற்க, தொடங்கற்க - "" விகுதி
வாழிய - "இய" விகுதி
வாழியர் - "இயர்" விகுதி
எனல் - "அல்" விகுதி
எச்சங்களின் விளக்கம்
          சில நேரங்களில் ஒரு வாக்கியத்தில் இரண்டு வினைமுற்றுகள் இருப்பது போன்று வருவதுண்டு. அதில் முதலில் வரும் வினைமுற்று முற்றெச்சம் என்று வழங்கப்படுகிறது:-
எடுத்துக் காட்டு:
கண்டனன் வணங்கினான்- கண்டனன் என்பது முற்றெச்சம்.
உடையினன் தோன்றினன் - உடையினன் என்பது முற்றெச்சம்.
உவந்தனன் ஏத்தி - உவந்தனன் என்பது முற்றெச்சம்
பெயரெச்சம்
          பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் பெயரெச்சங்களாம்:-

o    எடுத்துக்காட்டு:
உண்ட கண்ணன் - உண்ட என்பது இறந்தகாலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணுகின்ற பொருள் - உண்ணுகின்ற என்பது நிகழ்காலம் காட்டும் பெயரெச்சம்
உண்ணும் வேளை - உண்ணும் என்பது எதிர்காலம் காட்டும் பெயரெச்சம்
எனல் - "அல்" விகுதி
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
          பெயரெச்ச வகைகளில் "" என்னும் எழுத்தில் முடிகின்றவையும் எதிர்மறைப் பொருளைத் தருகின்றவையும் அடுத்த சொல்லைப் பெயர்ச்சொல்லாய் கொண்டு முடிபவையும் ஏறக்குறைய ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்களாகும்:-

o    எடுத்துக்காட்டு:
எய்துவர் எய்தாப் பழி - எய்தா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
நாறா மலரனையர் - நாறா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

0 comments:

Post a Comment